புத்தம் புதிய திரைப்படங்களின் பகுக்கும் வசதியுடன் கூடிய சரியான தகவல்கள் பொதிக்கப்பட்ட பாடல்கள் (Library Embedded MP3), பாடல் வரிகள், முன்னோட்டங்கள், விமர்சனங்கள், சம்பந்தப்பட்ட உரலிகள் மற்றும் தகவல்களை, பகிர்தல், பகுத்தல், தேடல் மற்றும் தரவிறக்கத்திற்கான வசதிகளோடு உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் இத்தளத்தில் இலகுவாகப் பெறலாம்.

Saturday, July 2, 2011

வானம்


வகை : நெகிழ்ச்சி-சென்டிமென்ட்
ஆண்டு : 2011
இயக்கம் : க்ரிஷ்
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடல்கள் : யுவன்சங்கர் ராஜா, நா.முத்துக்குமார், சிலம்பரசன், அபிஷேக், லாரன்ஸ்
நடிகர்கள் : சிம்பு என்ற எஸ்.டி.ஆர், பரத், சந்தானம், அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளால், வேகா தமோடியா, சோனியா அகர்வால், ஜாஸ்மீன்
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
வசனம் : க்ரிஷ்
படத்தொகுப்பு : ஆண்டனி
கதை, திரைக்கதை : க்ரிஷ்
தயாரிப்பு : VTV Production
ஒருவரிக் கதை : கேபரேக்கு பணம் திருடும் ஏழை இளைஞன், மனிதநேயமின்றி நடந்துகொள்ளும் மேல்தட்டு இளைஞன், இந்து போலீசால் தீவிராதியாக கைது செய்யப்படும் முகமதியர், சென்னையில் தொழில் துவங்க வரும் விபச்சாரி, சிறுவனின் படி்புக்காக கிட்னியை விற்கத் துணிந்த தாய் - இவர்களின் வாழ்க்கை ஒன்றினையும் புள்ளியில் உணரப்படும் மனிதம்
எண் பாடல் பாடியவர்கள்
1 எவன்டி உன்னப் பெத்தான் எஸ்.டி.ஆர்., யுவன்சங்கர் ராஜா
2 வானம் யுவன்சங்கர் ராஜா
3 கேபிள் ராஜா அபிஷேக், லாரன்ஸ்
4 Who am I? பென்னி தயால்
5 No Money No Money எஸ்.டி.ஆர்., ஆன்ட்ரியா, ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள்:
தகவல்கள்:
பல தடங்கள்களுக்குப் பிறகு வெளிவந்த நல்லபடம். தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக். தெலுங்கில் லேகா நடித்த வேடத்தில், கெட்டவனிலிருந்து நீக்கியதால் சிம்புவுடன் நடிக்க மறுப்பு, அந்த வேடத்திற்கு சினேகா உள்ளாலை புக் செய்து, சிம்புவுடன் உரசல் ஏற்பட்டதால் அவரும் நடிக்க மறுப்பு, கதை உரிமை சூப்பர் குட் பிலிம்ஸிடமிருந்து வி.டி.வி. புரொடக்சனுக்கு மாற்றம், படப்படிப்பில் சிம்புவுக்கு மூன்று முறை காயம், ஆபரேஷன், கோ படத்தில் நடிக்க சிம்பு மறுத்ததால் ஹிட் குடுத்தாகவேண்டிய கட்டாயம், எவன்டி உன்னப் பெத்தான் என்கிற ஒரு பாடலை மட்டும் பாடல் வெளியீட்டு விழாவில் வெளியிட்டது, அதை சிம்புவே பாடியது, சிம்புவும்-பரத்தும் இணைந்த செய்யும் படம், இப்படி எக்கச்சக்க பரபரப்புகளுக்குப் பிறகு படம் வெளிவந்திருக்கிறது.

பட ரிலீஸூக்கு முன் டிரைலர் கூட காட்டவில்லை. ஆனால், முதல் காட்சிக்கே மிகப்பெரிய வரவேற்பு. கோதாவில் சிம்பு நிராகரித்த கோ படமும் ஒரே சமயத்தில் திரையிடப்பட்டிருக்க கோ நன்றாக இருந்தது என்று பேசப்பட்டாலும், வானத்திற்கு மோசமான விமர்சனங்கள் ஏதுமின்றி, நல்ல வரவேற்பைப் பெற்றது. பாடல்களே பெரிதாக எதிர்பார்க்க வைத்தன. அதையும் தாண்டி, படமும், கதையும், கேமராவும் நன்றாகவே இருந்தது. விமர்சகர்கள் பெரும்பாலும் நல்லபடியாவே விமர்சித்திருந்தார்கள். ஆனந்தவிகடன் 44 மதிப்பெண் தந்திருந்தது. மனிதநேயத்தை இந்த நேரத்தில் உணர்த்த இப்படி ஒரு படம் தேவைதான்.
முன்னோட்டம்

Monday, June 27, 2011

அழகர்சாமியின் குதிரை

வகை : கிராமத்து எதார்த்தம்
ஆண்டு : 2011
இயக்கம் : சுசீந்திரன்
இசை : இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா
பாடல்கள் : ஜெ.ஃபிரான்ஸிஸ் கிருபா, சினேகன், யுகபாரதி
நடிகர்கள் : அப்புக்குட்டி, சரண்யா மோகன், ராமகிருஷ்ணண், தேன்மொழி
ஒளிப்பதிவு : தேனீ ஈஸ்வர்
வசனம் : பாஸ்கர் சக்தி
படத்தொகுப்பு : மு.காசிவிஸ்வநாதன்
கதை, திரைக்கதை : சுசீந்திரன்
தயாரிப்பு : மதன்
வெளியீடு : க்ளௌட் நைன்
ஒருவரிக் கதை : ஊர்த்திருவிழா சமயத்தில் காணாமல் போன சாமி அழகரின் மரக்குதிரைக்கு பதிலாக வந்து மாட்டிக்கொள்ளும் உயிருள்ள குதிரையை மீட்கப் போராடும் அப்பாவி அழகர்சாமியின் கதை
எண் பாடல் பாடியவர்கள்
1 குதிக்கிற... குதிக்கிற... இளையராஜா
2 அடியே இவளே... தஞ்சை செல்வி, சினேகன், லெனின் பாரதி, ஹேமாம்பிகா, முருகன், ஐயப்பன், மாஸ்டர் ரீகன், செந்தில் தாஸ், அனிதா
3 பூவக் கேளு கார்த்திக், ஸ்ரேயா கோஷல்
பாடல்கள்:
தகவல்கள்:
முழுக்க, முழுக்க எதார்த்தமான படம். கதாநாயகன் அப்புக்குட்டி என்று படப்பிடிப்பின் போது தெரிந்த்துமே, இப்படம் மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டது. எல்லோருக்கும் நல்ல ஒரு படத்தைத் தரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே இருந்த்து. அதை படம் நிறைவுசெய்திருக்கிறது.
பாஸ்கர் சக்தியின் குறுநாவல் தான் படம் என்றாலும், தமிழ் சினிமாவின் பல மரபுகளை உடைத்தெறிந்து வந்திருக்கிறது அழகர்சாமியின் குதிரை. விமர்சனம் கொடுத்த அத்தனை பதிவர்களும் படத்தை மனதார வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். அதைப்பார்க்கும் போது படத்தில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சில குறைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றே பட்டுவிடுகிறது.

இளையராஜா பின்ணணி இசையில் கிராமத்து வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தியிருக்கலாம், இன்னும் இசையால் மெருகேற்றியிருக்கலாம், சரண்யா மோகனைத் தவிர்த்து அந்த இடத்திற்கு வேறொரு கிராமத்து முகத்தையே தேர்வு செய்திருக்கலாம், அழகர்சாமிக்கும், சரண்யாமோகன் கதாபாத்திரத்திற்குமான நெருக்கத்தை இன்னும் ஆழமாகச் சொல்லியிருக்கலாம், முடிவில் அழகர்சாமியின் உயிரை குதிரை காப்பாற்றுவதைப் போல அமைந்த்திருப்பதை மாற்றியிருக்கலாம் என்று சின்னச் சின்னதாக பதிவர்கள் இன்னும் ஆசைப்பட்டாலும், முடிவில் மிக மிக திருப்திகரமான படமாக இருப்பதாக அனைவரும் மனதாரப்பாராட்டியிருக்கிறார்கள். எதார்த்த குலையாத சினிமாவாக பதிந்திருப்பதில் படமும் மக்களுக்கு பிடித்துப்போய் இருக்கின்றது என்பதே உண்மை.
முன்னோட்டம்:

Sunday, June 26, 2011

அவன்-இவன்


வகை : நகைச்சுவை - அதிரடி
ஆண்டு : 2011
இயக்கம் : பாலா
இசை : யுவன்சங்கர் ராஜா
பாடல்கள் : நா.முத்துக்குமார்
நடிகர்கள் : விஷால், ஆர்யா, மதுஷாலினி, ஜனனி ஐயர்
ஒளிப்பதிவு : ஆர்தர் ஏ.வில்சன்
வசனம் : எஸ்.ராமகிருஷ்ணண்
ஒளி, ஒலிக் கோர்ப்பு : சுரேஷ் அர்ஸ்
கதை, திரைக்கதை : பாலா
தயாரிப்பு : கல்பாத்தி அகோரம்
ஒருவரிக் கதை : இறைச்சிக்காக கேரளாவிற்குக் கடத்தப்படும் மாடுகளைக் காட்டிக்கொடுக்கும் ஜமீனின் முடிவால் பிறக்கும் அகோரமான விளைவு
எண் பாடல் பாடியவர்கள்
1 ராசாத்தி ஹரி சரண்
2 டைய்யா டைய்யா டோலு சுச்சித்ரா
3 ஒரு மலையோரம் விஜய் யேசுதாஸ், சிறுமி பிரியங்கா, சிறுமி ஸ்ரீநிஷா, சிறுமி நித்யஸ்ரீ
4 முதல் முறை விஜய் பிரகாஷ்
5 அவனப்பத்தி டி.எல்.மகாராஜன், சத்யன்
பாடல்கள்:
தகவல்கள்:
படப்படிப்பு துவங்கிய நாள் முதலே மக்களிடம் அதிகமாகப் பேசப்பட்டது. விஷாலின் தனித்துவமான நடிப்பு, ஆர்யாவின் காமெடி, எஸ்.ராமகிருஷ்ணண் வசனம், முதன் முறையாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாலா, முதன்முறையாக சீக்கிரமே படப்பிடிப்பு செய்யப்பட்டு வெளிவரும் பாலா படம் இப்படி எத்தனையோ சங்கதிகளால் மக்களிடம் படம் வெளிவருதற்கு முன்னமே அபிமானம் பெற்றுவிட்ட படம்.

படத்தைப் பற்றி பலரும் பலவாறு பேசுகிறார்கள். முதல் பாதியில் கதையின்றி படம் நகர்வதும், இரண்டாம் பாதியில் திடீரென்று உருவெடுக்கும் வில்லனும் வலைப்பூ விமர்சகர்களிடம் சாதக, பாதக விமர்சனங்களை விவாதமாகவே எடுத்துவைத்தன. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் என்பது மட்டும் உறுதியாகப்பட்டது.
முன்னோட்டம்: