புத்தம் புதிய திரைப்படங்களின் பகுக்கும் வசதியுடன் கூடிய சரியான தகவல்கள் பொதிக்கப்பட்ட பாடல்கள் (Library Embedded MP3), பாடல் வரிகள், முன்னோட்டங்கள், விமர்சனங்கள், சம்பந்தப்பட்ட உரலிகள் மற்றும் தகவல்களை, பகிர்தல், பகுத்தல், தேடல் மற்றும் தரவிறக்கத்திற்கான வசதிகளோடு உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் இத்தளத்தில் இலகுவாகப் பெறலாம்.

Friday, February 4, 2011

எங்கேயும் காதல்



வகை : காதல்
ஆண்டு : 2011
இயக்கம் : பிரபுதேவா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்கள் : வாலி, நா.முத்துக்குமார், தாமரை, கார்க்கி,எம்சி ஜெஸ், காஷ்
நடிகர்கள் : ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோத்வானி
ஒளிப்பதிவு : நீரவ் ஷா
தயாரிப்பு : ஏ.ஜி.எஸ். என்டர்டெய்ன்மென்ட், கல்பாத்தி அகோரம்
எண் பாடல் பாடியவர்கள் வரிகள்
1 எங்கேயும் காதல் ஆலப் ராஜூ, தேவன், ரணினா ரெட்டிஉண்டு
2 தீ இல்லை நரேஷ் அய்யர், முகேஷ், கோபால் ராவ், மஹதி, ரணினா ரெட்டி உண்டு
3 நங்காய் ரிச்சர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவா இல்லை
4 லோலிதா கார்த்திக், பிரசாந்தினி உண்டு
5 Bathing At Cannes எம்சீ ஜேஸ், கார்த்திக், ரணினா ரெட்டி, காஸ், க்ரிஸ்ஸி இல்லை
6 நெஞ்சில் நெஞ்சில் ஹாரிஸ் ராகவேந்திரா, சின்மயிஉண்டு
7 திமு திமு கார்த்திக்இல்லை
பாடல்கள்:
வரிகள்:
பாடல் விமர்சனம்:
ஒரே ரிதத்தில் ஒலிக்கும் எங்கேயும் காதல் பாடலில் ஆலப் ராஜூவின் குரல் ஐஸ்கிரீம் உருகல். குபீர் உற்சாகம் கொப்பளிக்கும் ரிச்சர்ட்டின் குரல் தான் நங்காய் பாடலின் ஸ்பெஷல். கேட்டுப் பழகிய மெட்டுக்கு வாலியின் வார்த்தைகள் மட்டும் வளம். லோலிட்டா என்ற வார்த்தையில் ஒரு காந்தக் கவர்ச்சி. அதைக் குலைக்காமல், மெல்லிய பீட்களில் ஒலிக்கிறது இசை. 'பெண்கள் என்றால் செடி. . . பற்றிக்கொள்ளும் கொடி. . .' என்று சிம்பிள் எதுகை மோனையின் வரிகளில் ஈர்க்கிறது தாமரையின் வரிகள். ஜல்ஜல் இசை ஒலிக்கும் நெஞ்சில் நெஞ்சில் பாடலில் இதமாகப் பதமாக பொருந்தி ஒலிக்கிறது ஹாரிஸ், சின்மயி குரல்கள். திமு திமு பாடல் பல்லவி, சரணங்களில் வருடுகிறது நா.முத்துக்குமாரின் மென் காதல் வார்த்தைகள். கைபிடித்து மழைப்பாதையில் அழைத்துச் செல்வது போல அந்த வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கிறது கார்த்திக்கின் குரல்.
-ஆனந்த விகடன்(15.12.2010)
தகவல்கள்:
இச் - என்று பெயரிடப்பட்டு படமெடுத்து வந்த பிரபுதேவா, படப்பிடிப்பின் பாதியில் படத்தின் பெயரை எங்கேயும் காதல் என்று மாற்றினார். படத்தில் நடன இயக்குனர் ராஜூ சுந்தரமும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வருகிறார். படப்பிடிப்பு முழுதும் முடிந்துவிட்டு படம் இன்னும் வெளிவராத நிலையில் விஷால் மற்றும் சமீரா ரெட்டியை வைத்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கிவிட்டார். அப்படத்திற்கான பெயர் இன்னும் வைக்கப்படவில்லை என்பது சேதி.